இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழீழ வான் புலிகளின் முதல் தாக்குதல்(26.03.20070 மூன்றாண்டுகள் நிறைவு

கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள்அறிவித்த உலகுக்கு அறிவித்த நாளின் (26.03.2007) மூன்றாம் ஆண்டு இன்று.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசியத் தலைவர் அவர்கள், வான்புலிகள் முதன்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.

தமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்;தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

இதில் வான்கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய வான் கரும்புலிகள் வீரவரலாறாகினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக